தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங் களும் - அதற்குரிய விதிகளும் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (22.8.2022) தீர்ப்பளித்தது. அதுகுறித்து திருவாரூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், இன்று (23.8.2022) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். நேரில் சந்தித்து இதுகுறித்து விரிவாக ஆலோசனை செய்யலாம் என்றும் முதலமைச்சரிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
Tuesday, August 23, 2022
முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு - வாழ்த்து!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment