பி.ஜே.பி. - குஜராத் தேர்வு முறைகேடு! அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

பி.ஜே.பி. - குஜராத் தேர்வு முறைகேடு! அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது!

அகமதாபாத், ஆக.2 குஜராத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் ஆங்கிலமே தெரியாமல் அமெரிக்கா சென்றுள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

வெளிநாடுகளில் படிக்க மற்றும் பணி புரியச் செல்வோருக்கு ஆங்கில திற னறிவு தேர்வான அய்.இ.எல்.டி.எஸ். என்னும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்த தேர்வு மிகவும் கடி னமானதாகும்.  இந்தத் தேர்வில் அபரி மிதமான ஆங்கிலப் புலமை பெற்ற வர்கள்கூட 7 மதிப்பெண்கள் பெறவே மிகவும் சிரமப்படுவார்கள்.

இந்நிலையில் அண்மையில் கனடா வில் இருந்து அமெரிக்காவுக்குச் சட்ட விரோதமாகச் செல்ல குஜராத்தை சேர்ந்த 6 மாணவர்கள்  முயன்றதால், அவர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களி டம் அமெரிக்க நீதிபதிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.  ஆனால் அவர் களுக்கு ஆங்கிலம் தெரியாததால் விசா ரணையில் தடுமாறி உள்ளனர்.

இதையொட்டி இந்தி மொழி பெயர்ப் பாளர்கள் உதவியுடன் விசாரணை நடந்தது.  விசாரணையின்போது இவர் கள் அய்.இ.எல்.டி..எஸ். தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது.  ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களே சரியாக மதிப்பெண்கள் பெற முடியாத தேர்வில், இவர்கள் 7 மதிப்பெண்கள் வரை பெற்றது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இதையொட்டி இந்த மாணவர் களுக்குக் குஜராத் மாநிலத்தில் நடந்த அய்.இ.எல்.டி..எஸ். தேர்வில் முறைகேடு கள் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  அதிகாரிகள் மேற் கொண்டு விசாரணை நடத்தி வரு கின்றனர்.

No comments:

Post a Comment