விலைவாசி உயர்வால் பென்சில், ரப்பர் வாங்க முடியாத சிறுமியின் மனக்குமுறல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

விலைவாசி உயர்வால் பென்சில், ரப்பர் வாங்க முடியாத சிறுமியின் மனக்குமுறல்!

மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகியது

லக்னோ, ஆக.2 விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 வயதுச் சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆறு வயதுச் சிறுமி, விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் சிரமம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்தி துபே என்ற சிறுமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் கிரித்தி துபே. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன். மோடி நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கீங்க. என்னுடைய பென்சில் மற்றும் ரப்பரின் விலைகூட அதிகமாயிருக்கு. இதுமட்டுமல்லாமல் மேகியின் விலையும் கூடிருச்சு. என் அம்மா பென்சில் கேட்டா என்னை அடிக்குறாங்க. நா என்ன பண்ண முடியும். மற்ற குழந்தைகள் என்னுடைய பென்சிலைத் திருடுறாங்க” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

அந்தச் சிறுமியின் தந்தை வழக்கு ரைஞரான விஷால் துபே கூறும்போது, "இது என் மகளின் `மன் கி பாத்.' அண் மையில் பள்ளியில் பென்சிலைத் தொலைத்தபோது அவங்க அம்மா திட்டியதால் கோபமடைந்திருக்கிறார்” என்றார். சிப்ரமாவ் மாவட்டத்தின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்  அசோக் குமார் செய்தியாளர்களிடம், ”இந்தச் சிறுமியின் கடிதம் சமூக வலைதளங்கள் மூலம்தான் அறிந்தேன்."குழந்தைக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாராக இருக்கிறேன், மேலும் அவளது கடிதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென் றடைவதை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று கூறியிருக்கிறார். இந்தியில் அந்தச் சிறுமி எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விலைவாசி சிறுமியைக்கூட பாதித் திருக்கிறது, இது கடிதம் மூலம் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டி ருக்கும்போது இதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிதி அமைச்சர் விதிமுறை களை மீறி தேர்தல் பரப்புரைகளைப் போல் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மீது குறைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். 

விதிமுறைகளை மீறினார்கள் என்ற காரணத்திற்காக தொடர்ந்து இடைநீக் கம் செய்யும் மாநிலங்களவை, மக்க ளவை  தலைவர்கள் நிர்மலா சீதாராம னின் விதிமுறை மீறிய உரைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.

No comments:

Post a Comment