அற்ப வழக்கா? கட்டாய அபராதம் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு. லலித் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

அற்ப வழக்கா? கட்டாய அபராதம் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடில்லி, ஆக. 19- அற்பமான வழக்குகளை தாக்கல் செய் வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாய மாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள யு.யு.லலித் வலியுறுத் தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக் குகள் நிலுவையில் உள் ளன. எனவே அற்பமான வழக்குகள் நீதிமன்றங்க ளில் தாக்கல் செய்யப்படு வதைத் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அற்ப வழக்கு களை தாக்கல் செய்வோர் மீது அபராதம் விதிப்பதை கட்டாயமாக்க வேண் டும். அதற்கான வழி முறையை உருவாக்க வேண்டும். நீதிமன்றத்தின் விலை மதிப்பற்ற நேரத் தையும், வளங்களையும் பயன்படுத்தி அற்பமான வழக்குகளில் தோற்கும் தரப்பினர் மீது அதற்கான செலவினத்தை சுமத்த வேண்டியது கட்டாயமா கும்.

உண்மையில் அரச மைப்புச் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்றத்தின் முதன்மையான செயல் பாடு என்பது சட்டத்தை வகுப்பதுடன் சிக்கலான அரசமைப்புச் சட்டம் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாகும். உச்ச நீதிமன்றத்தில் 7 அல்லது 8 நீதிபதிகள் இருந்த போதும் கூட, அய்ந்து நீதிபதிகளை ஒதுக்கி அர சியல் சாசன அமர்வை அமைக்க முடியும் எனும் போது தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 34 ஆக உள்ளது. எனவே, அய்ந்து நீதிபதிகள் அடங்கிய நிரந்தரமான அரசியல் சாசன அமர்வை நிச்சயமாக உருவாக்க முடியும். இது தற்போ தைய சூழ்நிலையில் மிக வும் அவசியமானதும் கூட. கடந்த காலத்தை நாம் உற்றுநோக்கும்போது ஏழே ஆண்டுகள் பதவி யில் இருந்த நீதிபதி கிருஷ்ண அய்யர் 55 அர சியல் சாசன அமர்வுக ளின் தீர்ப்புகளில் பங் கேற்றுள்ளார். அதே போன்று, நீதிபதி பி.என். பகவதியும் 113 தீர்ப்புகளில் தனது பங்களிப்பை வழங் கியுள்ளார்.

கரோனா காலத்தில் 2 ஆண்டுகளுக்கு கட்டுப் பாடுகள் நீட்டிக்கப்பட் டதால் உச்ச நீதிமன்றத் தில் தேங்கிய வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதைய டுத்து, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவை யில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 4 கோடி யைக் கடந்துள்ளது. இதில் 4-இல் 1 பகுதி வழக்கு கடந்த 5 முதல் 20 ஆண்டுகளில் தொடுக்கப் பட்டவையாகும். எனவே, இதனைக் கருத் தில் கொண்டு விரைவாக நீதி வழங்குவதில் உள்ள தடைகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமான வகையில் அகற்றப்பட வேண்டும்.அதன்படி உச்ச நீதிமன்றம் என்ற வகையில், தவிர்க்கக் கூடிய, அற்பமான வழக்குகளை களையெடுக்க ஆரோக் கியமான நடைமுறையை நாம் உருவாக்க வேண் டும். பொது வெளியில் விளம்பரம் தேட வேண் டும் என்ற நோக்கத்திற் காகவே பலரால் பொது நல வழக்குகள் நீதிமன் றங்களில் தொடுக்கப்படு கின்றன. எனவே, அதற்கும் கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு யு.யு. லலித் தெரிவித்தார்.

No comments:

Post a Comment