பட்டுக்கோட்டை, ஆக. 11- பட்டுக் கோட்டை மாவட்ட கழக துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண் டர் சா. சின்னக்கண்ணு அவர்கள் தனது 90ஆவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கழகத் தோழர் கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
மாவட்ட திராவிடர் கழக செய லாளர் மல்லிகை வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்ல தம்பி, பொதுக்குழு உறுப் பினர் இரா. நீலகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அ. காளி தாசன், மாவட்ட ப.க தலைவர் ரத்தின சபாபதி, மாவட்ட அமைப் பாளர் சோம நீலகண்டன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அண்ணாதுரை, மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் எஸ்.நடராஜன், ஒன்றிய செயலாளர் ஏனாதி ரங்கசாமி, ஒன்றிய அமைப் பாளர் வெண்டாக்கோட்டை சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் கா.தென்னரசு, நகர கழக செயலாளர் கா.தென்னவன், நகர கழக தலைவர் சிற்பி சேகர் ஆகியோர் பெரியார் பெருந் தொண் டர் சா.சின்ன கண்ணு அவர்களுக்கு பயனாடை அணி வித்து வாழ்த்து கூறி சிறப்பித்தனர். குடும்பத்தின் சார்பில் வருகை தந்த தோழர்கள் அனைவருக்கும் சா.சின்ன கண்ணு அவர்களின் மகன் சி.கபிலன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அனைவருக்கும் மதியம் பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment