தருமபுரி,ஆக.15- தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி பகுதியில் பச்சைஅம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று (14.8.2022) மினிவேனில் 'கடவுளர்' சிலையை வைத்து ஊர்வலமாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக பின் தொடர்ந்து வந்தனர். அப்போது முக்கிய சாலையில் வந்தபோது பின்னால் வந்த லாரி பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து 'கடவுளர் சிலைகளை' ஏற்றி வந்த மினிவேன்மீது மோதி யது. இதில் முருகன், செந்தில், வள்ளியம்மாள், சீனிவாசன், கோவிந்தம்மாள், சுப்பிரமணி, பவன் ஆகிய 7 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தம் மாள், சுப்பிரமணி ஆகிய 2 பேர் பரிதாப மாக உயிரிழந்தனர். இது குறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Monday, August 15, 2022
Home
தமிழ்நாடு
'அம்மன் சக்தி இவ்வளவுதான்!' கோவில் திருவிழா கூட்டத்திற்குள் புகுந்த லாரி மோதி பக்தர்கள் பலி
'அம்மன் சக்தி இவ்வளவுதான்!' கோவில் திருவிழா கூட்டத்திற்குள் புகுந்த லாரி மோதி பக்தர்கள் பலி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment