இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி!

தொகுதியில் தீர்க்கப்படாத பத்து கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப் பட்டியலை அனுப்பிடுக!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஆக.24- திராவிட முன் னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, 7-5-2022 அன்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்தப்படுவது குறித்த முக்கி யமான அறிவிப்பினை  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக இந்த ஆண்டே 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படும் என்றும் தெரிவித்திருந்தார். 

அதன்படி, தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப் படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப் படுத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப் பினர்களும்  முதலமைச்சர்   நேற்று (23.-08.-2022) கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தின் விவரம் பின் வருமாறு.

இந்த அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், 07.05.2022 அன்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக் கூடிய வகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள் ளிட்ட மேலும் அய்ந்து புதிய திட் டங்களைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நான் அறிவித்ததைத் தங்களுக்கு அன்புடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

சட்டமன்ற உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும் நமது தொகு தியின் வளர்ச்சியிலும், மேம்பாட் டிலும் நமது பங்களிப்பினை ஆற்று வதில் மிகுந்த அக்கறை கொண் டுள்ளோம். அந்த வகையில், மக் களின் தேவைகளை நன்கு உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அவர்களது பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நமக்கு உள் ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கை யாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட இய லாத நிலை இருக்கலாம், மக்களின் இன்றியமையாத தேவையின் அடிப் படையிலான அத்தகைய திட்டங் களுக்கான பணிகளை நிறைவேற் றிடத் திட்ட அறிக்கை தயாரித்து அரசு அளவில் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசி யமும் இருக்கலாம்.

இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்துச் சட்ட மன்றத் தொகுதிகளிலும் நடை முறைப்படுத்தக்கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும். இத்திட்டத் தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப் படாத அவசியப் பணிகள் குறித்து அந்தந்தத் தொகுதிகளின் சட்ட மன்ற உறுப்பினர்களின் பரிந்துரை களைப் பெற்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதி காரிகளுடன் இணைந்து, இவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

உங்களுடைய தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று சட்டமன்ற உறுப்பினராகிய நீங்கள் கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம். பட்டியலில் இருக் கக்கூடிய மிக முக்கியமான திட் டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின்கீழ் செயல் படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதியில்  நெடுங் காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள 

· குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக் கூடிய உள் கட்ட மைப்பு வசதிகள், 

· வேளாண் உற்பத்தியை சந்தைப் படுத்துவதற்குரிய பணிகள்,

· இணைப்புப் பாலங்கள் மற்றும் சாலைகள்,

· மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

· பாலிடெக்னிக் மற்றும் அய்.டி. அய் போன்ற புதிய கல்வி நிறு வனங்கள் அல்லது தற்போ துள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், தொழில்  வளர்ச்சியை மேம்படுத்தக் கூடிய வசதிகள், 

· மின் மயானம், நவீன நூலகம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், புதிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங் களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம் படுத்தக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நீங்கள் பரிந் துரைக்கலாம்.

எனவே, தங்களது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப் படாத பத்து முக்கியமான கோரிக் கைகளை, தேவை மற்றும் அவசி யத்தின் அடிப்படையில் நீங்கள் ஆராய்ந்து, அவற்றினை முன்னுரி மைப்படுத்தி, அந்தப் பரிந்துரைப் பட்டியலைத் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அடுத்த 15 தினங்களுக் குள் அனுப்பி வைக்குமாறு உங்களை அன்புடன் இந்தக் கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

சட்டமன்றத் தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்டநாள் தேவைகள் இந்தப் புதிய முன்னோடி திட்டத் தின்கீழ், உங்கள் மூலமாக நிறை வேறும் என உறுதியாக நான் நம்புகிறேன். 

இது மட்டுமன்றி, மாவட்டங் களிடையே இருக்கக்கூடிய சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச் சீர்செய்து, தமிழ் நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கும் இத்திட்டம் மிகுந்த பங்களிக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. 

அதற்கான முழு ஒத்துழைப் பையும் நீங்கள் அளிக்க வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment