முதலமைச்சர் தலைமையில் 30ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

முதலமைச்சர் தலைமையில் 30ஆம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை

சென்னை, ஆக.24 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் வரும் 30ஆம் தேதி தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோ சனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது

கடந்த ஆண்டு  டிசம்பர் மாதத் தில் சென்னையில் துணைவேந்தர் களுடன் ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். அதைத்தொடர்ந்து, உதகையில் துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாடு கடந்த ஏப்ரல் மாதம் 25, 26  ஆகிய இரண்டு நாள்கள் ஆளுநர்  சார்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அதிகாரி வேம்ப உட்பட பலர் சிறப்புரை ஆற்றினர். 

இதில்,  ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப் பட்டதாக கூறப்பட் டது. இது விமர்சனங்களை எழுப் பியது.

இதையடுத்து, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்  தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங் களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. 

அதன்படி ஆகஸ்டு 17ஆம் தேதி அக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், அன்றைய தினம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென  டில்லி பயணம் மேற் கொண்டதால், அந்த கூட்டம்   ஒத்தி வைக்கப்பட்டது

இந்த நிலையில், வருகிற 30ஆம் தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல மைச்சர் ஆலோசனை மேற் கொள் ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல், உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 

மேலும், ’நான் முதல்வன்’ திட்டத்துக்கேற்ப மாண வர்களை தயார்படுத்துதல் தொடர் பாகவும், புதிய  மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாகவும் துணைவேந்தர்களுடன் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.


No comments:

Post a Comment