கோழைகளின் கைவரிசை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

கோழைகளின் கைவரிசை!

திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூர் தந்தை பெரியார் சிலையின் மார்பில் சரஸ்வதி படத்தை இரவோடு இரவாக ஒட்டி ஓடி ஒளிந்துள்ளனர் கோழைகள்.

காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிலையாக நிற்கும் தந்தை பெரியாரைக் கண்டு இவ்வளவு நடுக்கமா? அட கோழைகளே!

கருத்தோடு கருத்து மோதல்கள் - அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது. தந்தை பெரியாரைச் சிறுமைப்படுத்த நினைத்தால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை சிறுமைப்படுத்துவார்கள் - முகவரியில்லாமல் போய்விடுவீர்கள், எச்சரிக்கை!

கோழைகளின் இந்தத் தொடர் கதைக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா?

No comments:

Post a Comment