திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூர் தந்தை பெரியார் சிலையின் மார்பில் சரஸ்வதி படத்தை இரவோடு இரவாக ஒட்டி ஓடி ஒளிந்துள்ளனர் கோழைகள்.
காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிலையாக நிற்கும் தந்தை பெரியாரைக் கண்டு இவ்வளவு நடுக்கமா? அட கோழைகளே!
கருத்தோடு கருத்து மோதல்கள் - அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது. தந்தை பெரியாரைச் சிறுமைப்படுத்த நினைத்தால், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை சிறுமைப்படுத்துவார்கள் - முகவரியில்லாமல் போய்விடுவீர்கள், எச்சரிக்கை!
கோழைகளின் இந்தத் தொடர் கதைக்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்குமா?
No comments:
Post a Comment