‘விடுதலை' சந்தா சேர்ப்புப் பணியின் தொண்டறச் செம்மல்களே,
உங்களது ஓய்வறியாத உழைப்பு, ஒப்பற்ற ஒத்துழைப்பு, அயர்வறியாத அடுத்தடுத்த ஆக்கப்பணி - ஈடுபாடுகள் நம்மை உலகத்தார் முன் உயர்த்திக் காட்டுகின்றது.
எனது தலைதாழ்ந்த நன்றி!
மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!
தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்துவிட்டேன் - களைப்பு சோர்வின்றி!
இடையில் இன்னும் 8 நாட்களே!
கண்துஞ்சாது கடமையாற்றி களமாடுங்கள்!
‘விடுதலை'யின் வீரவரலாற்றில் உங்களுக்கென்ற இடம் - உங்கள் பங்களிப்பே!
வடக்கே கூடிய காவிகள் ‘இந்தியாவை' பெயர் மாற்றி, ஹிந்து தேசமாக்கப் போகிறார்களாம்!
அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் தூக்கி எறியப்பட்டு, சனாதன மனுதர்மம் சதிராடுமாம்! சபையில் அமருமாம்!!
கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் கதி!
நம் மீட்சிக்குப் பதிலாக ‘நிரந்தர அடிமைகளாக' வாழவேண்டிய நிலையைப் புதுப்பிக்க துணிந்து பிரகடனம்!
டில்லிக்குப் பதில் வாரணாசி (காசி) அவர்களின் தலைநகரமாம்!
‘விடுதலை' தான் அதற்கேற்ற சரியான - எதிரான பிரச்சார ஏவுகணை - அறிவு ஆயுதம்!
எனவேதான், சந்தாக்கள் திரட்டும் ‘இலக்கில்' முனைவீர்! முந்துவீர்! சரித்திரம் படைப்பீர்!
உங்கள் தொண்டன்
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.8.2022
No comments:
Post a Comment