முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி பயணம் பிரதமரிடம் தமிழ்நாட்டிற்குரியனவற்றை வலியுறுத்துகிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி பயணம் பிரதமரிடம் தமிழ்நாட்டிற்குரியனவற்றை வலியுறுத்துகிறார்

சென்னை, ஆக. 15- நாளை டில்லி புறப் பட்டுச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலம் தொடர்பான பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய மனுவை அளிக் கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, டில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தினார். பிரதமர் தமிழ்நாடு வந்தபோதும் பல்வேறுகோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். அதில் நீட் தேர்வு, ஜிஎஸ்டி இழப்பீடு நீட் டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் தொடர்கின்றன.

இந்த நிலையில், 44ஆ-வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசுக்கு அனு மதி கிடைத்தது. இதற்காக ரூ.102 கோடி நிதிஒதுக்கி, சிறப்பான வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்கிடையே, முதலமைச்சர் ஸ்டாலின் கரோ னாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தொடர்பு கொண்டு நலம் பெற வாழ்த்திய பிரதமர் மோடியிடம், சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், டி.ஆர்.பாலு, கனி மொழி தலைமையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேரில் முதலமைச்சரின் அழைப்பு டன் பிரதமர் மோடியை சந்தித்த னர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிர தமர் மோடி பங்கேற்று, போட் டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஆக.9-ஆம் தேதி போட்டியின் நிறைவு விழா நடைபெற்ற நிலையில், போட் டியை சிறப்பாக நடத்தியதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் தார்.

இதற்கு நன்றி தெரிவித்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், இது போல இன்னும் பல பன்னாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு களை தமிழ்நாட்டிற்க்கு தரவேண் டும் என்றும், தொடர்ந்து தங்களது ஆதரவை தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந் தார். இந்த சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.16) டில்லி புறப்பட்டுச் செல்கிறார். அன்று இரவுடில்லியில் தங்கும் முதலமைச்சர், மறுநாள் 17ஆ-ம் தேதி காலை, குடியரசுத்தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன் கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக் கிறார். தொடர்ந்து, 17-ஆம் தேதி மாலை பிரதமர் மோடியை சந் தித்து பேசுகிறார். அப்போது, சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், கோரிக்கைகள் அடங் கிய மனுவையும்அளிக்கிறார். முத லமைச்சர் அன்றுஇரவே சென்னை திரும்புகிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப் பீட்டை நீட்டிப்பது, ஒன்றிய அர சின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதா வுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர் பாகவும், தமிழ்நாட்டுக்கு தேவை யான புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment