ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை?

புதுடில்லி,ஆக.13- ரயில் களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. 

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ரயில்வேக்கு செலவானது. 

ஆனால் கரோனா தொற் றால் ரயில்வே வருவாய் பாதிக் கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு உள் ளது. இந்த சலுகையை மீண்டும் வழங்க ஒன்றிய அரசு மறுத்து உள்ளது. 

தற்போதைய நிலையில் 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட் டுமே கட்டண சலுகை வழங்கப் படுகிறது. மீதமுள்ள சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை நாடாளுமன்ற நிலைக்குழு விரிவாக ஆய்வு செய்தது. இதற்கு பதிலளித் துள்ள நிலைக்குழு, மூத்த குடி மக்களுக்கான கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்யு மாறு ஒன்றிய அரசை அறி வுறுத்தி இருக்கிறது. 

பா.ஜனதா தலைவர் ராதா மோகன் சிங் தலைமையிலான இந்த குழு, இது தொடர் பாக ஒன்றிய அரசுக்கு கடந்த 4-ஆம் தேதி அறிக்கை அளித்துள்ளது. 

அதில், 'ஒன்றிய அரசின் பதி லின் அடிப்படையில், கரோனா தொற்று காரண மாக நிறுத்தப் பட்டு உள்ள மூத்த குடிமக் களுக்கான கட்டண சலுகை தற் போது வரை திரும்ப வழங்க வில்லை என இந்த குழு கருது கிறது. கரோனாவால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புகளில் இருந்து ரயில்வே தற்போது மீண்டு வரும் நிலையில், பல்வேறு வகையான பயணிகளுக்கான நியாயமான கட்டண சலு கையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என அறிவுறுத்தி உள்ளது. 

கரோனாவுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்கு கிடைத்த சலுகைகள் குறைந்த பட்சம் படுக்கை வசதி மற்றும் 3-ஆம் வகுப்பு ஏ.சி. பயணிகளுக் காவது வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள இந்த குழு, இதன் மூலம் பாதிக்கப்படக்கூடிய மற் றும் உண்மையிலேயே தேவைப் படும் மூத்த குடிமக்கள் மேற்படி வசதியைப் பெற முடி யும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. 

அதேநேரம் இந்த சலுகையை விட்டுக்கொடுக்கும் வசதியை பரவலாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறும் இந்த குழு ரயில்வே துறையை கேட் டுக் கொண்டு உள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் தானா கவே சலுகையை விட்டுக் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

No comments:

Post a Comment