தமிழ்நாட்டில் ரூ.39 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

தமிழ்நாட்டில் ரூ.39 கோடி மதிப்பு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை,ஆக.13- சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில்   11.8.2022 அன்று நடை பெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி யேற்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பெரும்பாலான உலக நாடு களில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளின் மூலம் போதைப் பொருள்கள் பயன் பாடு பழக்கம் குறைந்து வந்தா லும், ஆசிய நாடுகளில் அந்த எண்ணிக்கை குறையவில்லை.

எனவே, அதுகுறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் பணியினை ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழ்நாட்டில் முதலமைச்சர் தொடக்கி வைத்துள்ளார். 2013-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் ரூ.38.99 கோடி மதிப் புள்ள 952.1 டன் குட்கா, பான் மசாலா தமிழ்நாட்டில் கைப் பற்றப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஜூன் மாதம் வரை ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.96 டன் குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள் ளது. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.2.88 கோடி அபராதம் விதிக் கப்பட்டு, 75 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று, 1,308 உணவுப் பொருட்கள் மாதிரிகள் எடுக் கப்பட்டு, அதில் 1,093 மாதிரிகள் தரமற்றதாகவும், 136 மாதிரிகள் தரக்குறைவாக மற்றும் தவறான முத்திரைகள் இடப்பட்டதாக உள்ளது கண்டுப்பிடிக்கப்பட் டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக 686 குற்றவியல் வழக்குகளும், 107 உரிமையியல் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நீதிமன்றத் தால் ரூ.58.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகளிலும் கூட 5 வகையான மருந்துகள் போதை தரக்கூடி யவை என கண்டறியப்பட்டுள் ளது. மருத்துவருடைய பரிந் துரை ரசீது இல்லாமல், பொது மக்களுக்கு மருந்து வழங்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத் துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிலைய அதிகாரி மற்றும் உதவி மருத்துவ நிலைய அதிகாரிகளுக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளாக பனிப் போர் நிலவி வருகிறது. இரு வரும் மாறி மாறி பாலியல், திருட்டு புகார்களை கூறி வரு கின்றனர். அதுவும் இந்த புகார் களை சம்பந்தப்பட்ட துறை களிடம் கூறாமல், சமூகவலை தளங்களில் கூறி வருகின்றனர். 

எனவே, தற்போது, 2 மருத் துவர்களையும் பணியிட மாற் றம் செய்துள்ளோம். மேலும், இவர்கள் மீதான புகார் குறித்து தனிக்குழு அமைத்து விசா ரணை நடத்தப் பட்டு வருகிறது. அவர்களை பணியில் இருந்து விடுவித்திருக்க வேண்டும். இருந்தாலும், கருணை அடிப் படையில் அவர்களை பணியிடமாற்றம் வழங்கப்பட் டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


No comments:

Post a Comment