தண்டோரா போடுவதற்குத் தடை அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

தண்டோரா போடுவதற்குத் தடை அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

அரசின் பல்வேறு துறைகள் சார்பான அறிவிப்புகளுக்குத் தண்டோரா போடுவது கடுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறி ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது  மிக முக்கியமானதும், வரவேற்கத்தக்கதுமாகும்.

எத்தனையோ அறிவியல் முறைகள் வந்தபின்னும், தண்டோரா போடுவது அவசியமற்றது என்பதைவிட, ஜாதியைக் காக்கும் நடவடிக்கையாகும். அதனைத் தடைசெய்து தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ஜாதிக்கும், சனாதனத்திற்கும் சம்மட்டி அடி! முற்போக்குத் திசையில் 

மு.க. ஸ்டாலின் அவர்களின் 'திராவிட மாடல்' அரசு வெல்லட்டும்!

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.8.2022


No comments:

Post a Comment