முழு முதல் காரணம் வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 27, 2022

முழு முதல் காரணம் வீரமணி

தந்தை பெரியார் அவர்கள், தமது பகுத்தறிவுச் சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரப்புவ தற்காக உருவாக்கிய படைக்கலன் ‘விடுதலை’ நாளேடு. அதனைத் தொடர்ந்து நடத்துவதில் பெரிதும் இடர்ப்பாடுகளைச் சந்தித்த தந்தை பெரியார் அவர்கள், ஒரு காலகட்டத்தில் அவ்விதழை நிறுத்திவிடலாமா என எண்ணினார். அவ்வேளையில், அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றவர் இளவல் வீரமணி அவர்கள். இதுகுறித்து, தந்தை பெரியார் அவர்கள் 6.6.1964 அன்று, ‘விடுதலை’ இதழில் எழுதிய தலையங்கத்தில், இனி, ‘விடுதலை’க்கு பிரசுரகர்த்தாவா கவும், உண்மையான ஆசிரியரா கவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.

விடுதலையின் 25வது ஆண்டுத் துவக்கத்தில் இலட்ச ரூபாய்களை ‘விடுதலை’ நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும் கருதி, ‘விடுதலை’ வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

என்று குறிப்பிட்டுள்ளார். அன்று திரு.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராகப் பொறுப் பேற்றது முதல் இன்றுவரை, அது, தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வளர்ப்பதில் போர்வாளாகவே திகழ்ந்து வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றிக்கு முழு முதல் காரணமாகத் திகழும் தமிழர் தலைவர் திரு. வீரமணி அவர்களைப் பாராட்டுகிறேன்.

‘விடுதலை’ பவள விழா மலரில் டாக்டர் கலைஞர்...

No comments:

Post a Comment