பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 20, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 30 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதி N.ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு, வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். அருகில் மதிப்புறு முனைவர்பட்டம் பெற்ற கண்ணபிரான் ரவிசங்கர், பல்கலைக் கழக இணைவேந்தர் மருத்துவர் ராஜசேகரன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முனைவர்  S.  மோகன், துணைவேந்தர் Erstwhile  பாண்டிச்சேரி இந்திய காவல் பணியிருந்து ஓய்வுபெற்ற AX  அலெக்சாண்டர், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்  N.  முரளிக்குமரன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர்  P.  ஜெகதீசன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் மேனாள் உறுப்பினர்  J. இராமலிங்கம்,  வீ. அன்புராஜ், துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் மற்றும் முதன்மையர் உடன் இருந்தனர் (தஞ்சை வல்லம், 20.8.2022). 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழாவில் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு இலக்கியத்தில் (தமிழ்) இணைப் பேராசிரியரான பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களுக்கு தனது துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ‘‘மதிப்புறு முனைவர் பட்டம்'' (ஹானரிஸ் காசா) பல்கலைக்கழகத்தின் சார்பில் வேந்தர் முனைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள் (தஞ்சை வல்லம், 20.8.2022).


No comments:

Post a Comment