இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு அய்.நா. எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு அய்.நா. எச்சரிக்கை

நியூயார்க், ஜூலை 8 உல களவில் பட்டினியால் பாதிக் கப்பட்டவர்களின் எண் ணிக்கை கணிசமாக உயர்ந் துள்ளதாக அய்.நா. தெரிவித் துள்ளது.

பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக் குறை, அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடி யில் இலங்கை சிக்கியிருக் கிறது. இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு நாடுகளும், பன் னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற பன்னாட்டு நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதனால் தற்காலிக தீர்வு கிடைத் தாலும், நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரிய வில்லை. இந்த நிலையில் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் கரோனா தொற்று நோயின் தாக்கத்தால் ஏற்கெனவே அழுத்தத்தில் உள்ள நாடுகள், இலங்கை யைப் போன்ற அதே பொரு ளாதார நெருக்கடியைக் காணும் அபாயம் இருப்பதாக அய்.நா. தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக் கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்றுஅய்.நா. வளர்ச்சித் திட்டத்தின் நிர் வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசுகையில், 

"இலங்கையில் தற்போது நிலவும் மோசமான நிகழ்வு களை நாம் காண்கிறோம். இது போன்ற நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என் பதை அந்நாடுகளே கண்டு பிடிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் அவர் களுக்கு இலங்கையின் நெருக்கடி ஒரு எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828 மில்லிய னாக உயர்ந்துள்ளது. இது கரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு 150 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அய்.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட் டுள்ளது.


No comments:

Post a Comment