ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த காலத்தில் சிலரின் செயல்பாட்டால் ‘விடுதலை' தொடர்வது நின்றுபோனது, இது பெரும் மனச் சுமையாகவே எனக்கு இருந்து வந்தது. எனது 82ஆம் வயதிலும் மனம் தளராது சந்தா சேர்த்திடும் முயற்சியை மேற்கொண்டேன். எனக்கு பெருந்துணையாக ‘தமிழ்ச்சுடர்' நாளிதழ் நிருபர் நண்பர் ஆறுமுகம் அவர்களின் நட்புக் கிடைத்தது.
அவரிடம் வாகனம் இருந்தபடியால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியால் தற் போது 10 சந்தாக்கள் பெற்றுள்ளோம். தவறாமல் சந்தாதாரர்களுக்கு ‘விடுதலை' விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணி எனக்கு மிகவும் பெரிதும் மனமகிழ்வை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும் தவறாமல் தொடர்ந்து சந்தா சேர்க் கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன் என்று மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 10 சந்தாக்களும் ஒட்டன்சத்திரம் பகுதி யில் மட்டுமே பெறப்பட்டவையாகும்.
என்றும் அன்புடன்
வீர.கலாநிதி, ஒட்டன்சத்திரம்
No comments:
Post a Comment