லக்னோ, ஜூலை.6 இந்துக் கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத் தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர், அங்கு ஆய்வு செய்யச் சென்ற காவலரை தாக்க முயன்றதாக கைது செய்யப் பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இஸ்லாமியர் ஒருவர், இறைச்சி வாங்க வருபவர்களிடம், இந்துக் கடவுள் படங்கள் பொறிக் கப்பட்ட காகிதங்களில் கோழி இறைச்சியை பார்சல் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிலர் கொடுத்த புகாரின் பேரில், அந்த நபரை உத்தரப் பிரதேச மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
மதரீதியிலான சர்ச்சைக்கு பெயர்போன மாநிலம் உத்தரப்பிர தேசம். அங்குள்ள சம்பால் பகுதி யில், கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்த இஸ்லாமியர் தாலிப் ஹுசைன், கோழி இறைச்சி பார்சல் செய்துகொடுக்க, இந்து படங்கள் பொறிக்கப்பட்ட பேப்பரை பயன் படுத்தி வந்தாக கூறப்படுகிறது.
ஹுசைன் மத உணர்வுகளை தூண்டும் விதமாக, இந்து தெய்வங் களின் படங்கள் அடங்கிய காகிதத் தில் கோழி இறைச்சியை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கடைக்குச் சென்ற காவல்துறையினர், அவரது கடையில் சோதனை நடத்தச் சென்ற போது, அவர்களிடம் ஹுசைன் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டதாக வும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தாலிப் ஹுசைனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்கிருந்த இந்து கடவுள் படங்கள் பொறிக் கப்பட்ட பேப்பர்களை கைப்பற் றினர். தொடர்ந்து, அவரை கைது செய்துமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அவர்மீது, இந் தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153-கி [மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப் படையில் வெவ்வேறு குழுக்களி டையே பகைமையை ஊக்குவித்தல்], 295-கி [வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், எந்த வொரு வகுப்பினரின் மத உணர்வு களையும் அவமதிப்பதன் மூலம் சீற்றம் செய்யும் நோக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகள்] மற்றும் 307 [கொலை முயற்சி] வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்துக் கடவுள் படங்களைப் போட்டு (லட்சுமி வெடி) பட்டாசு வெடிக்கிறார்களே! விநாயகர் சுருட்டு, மூம்மூர்த்தி சுருட்டு என் றெல்லாம் இருந்ததில்லையா? மத வெறிக்கு அளவே இல்லையா?
No comments:
Post a Comment