கோட்டைக்குள் அதிமுக இனி நுழைய முடியாது தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

கோட்டைக்குள் அதிமுக இனி நுழைய முடியாது தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு

சென்னை, ஜூலை 17  "கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பு எடப்பாடி பழனிசாமி நேற்று (16.7.2022) சேலம் சென்றார். சேலத்தில் பேசிய அவர், "சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில், அதிமுகவும் கூட்டணி யில் இருந்த பாமகவும் சேர்ந்து 10 இடங்களில் வென்றது. சேலம் அதிமுக வின் கோட்டை. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, ஆட்சி உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், சேலம் மாவட் டத்தைப் பொறுத்தவரை அதிமுகவி னுடையது" என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அதிமுக "கோட்டை பற்றி இனி கனவுகூட காண வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து டி.ஆர்.பாலு, வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும் பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது கொள் ளையடித்த பணத்தில் கூட்டத்தைத் திரட்டி வைத்துக் கொண்டு, “இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது, அதிமுக வெற்றி பெறுவதற்கான அச்சாரம் போடப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று வசனம் பேசியிருக்கிறார்.

'ரத்தத்தின் ரத்தங்கள்'

திமுகவைத் திட்டினால்தான் மூன்று வேளை சோறு தின்று வயிறு வளர்க்க முடியும் என்பதே அதிமுகவில் உள்ள ‘அவதாரங்களின்’ நிலைமை. தங்களு டைய கட்சியின் தலைமை அலுவலகத் தின் வாசலிலேயே பழனிசாமி கோஷ் டியும் பன்னீர்செல்வம் கோஷ்டியும் ரணகளமாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட, ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ நாங்கள் என்று ஊரறிய-உலகமறிய சம்பவம் நிகழ்த்தினார்கள். அதன்பிறகு, இடைக் காலத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, தன் திடீர் அதிகாரத்தால் பன்னீர்செல்வத்தை நீக்கினார். தலைமை அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வம் பழனிசாமியை நீக்கினார். கட்சி அதிகாரத்திற்கான அவர்களின் இந்தத் தெருச்சண்டையை மறைக்க, திமுக மீது பாய்கிறார் பழனிசாமி.

தன்னுடைய சொந்த மாவட்டமான சேலத்திற்குச் சென்றுவிட்டு, சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும், சட்டமன்றத்தில் அந்த மாவட் டத்தில் வென்றதுபோல மற்ற மாவட் டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருக்கும் என்று பேசியிருக்கிறார். 

கொள்ளையடித்த பணத்தைச் செலவு செய்து பெற்ற சொற்ப - அற்ப வெற்றியைக் காட்டி உண்மையை மறைக்க நினைக்கும் பழனிசாமிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

உள்ளாட்சித் தேர்தலில்

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதே சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணைக் கவ்வியிருப்பதையும் மக்களின் பேராதர வுடன் சேலம் மாவட்டம் திமுக கோட் டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எப்படி மறக்க முடியும்? எடப்பாடி நகராட்சி உள்பட பெரும் பான்மையான இடங்களில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் திமுக கோட்டைதான். அன்பு எனும் கோட்டை கட்டி மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் முதலமைச்சர்.

 அதிமுக ஆட்சியில் கோட்டைக்குள் நுழைந்து ரெய்டு நடத்தினார்கள். டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய ஒன்றிய பாஜக அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல் லாத - முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவு கூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட் டைக்குள் ஒருபோதும் நுழைய விட மாட்டார்கள். 

அதிமுகவை டில்லி எஜமானர்களி டம் அடமானம் வைத்து, தன்னையும் தான் கொள்ளையடித்த சொத்துகளை யும் பாதுகாத்துக் கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டைக்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment