தாராபுரம், ஜூலை 7- திராவிடர் கழக இளைஞரணி தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் 1.7.2022 அன்று மாலை 6 மணி அளவில் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் திடலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தாரா புரம் மாவட்ட கழகத்தலைவர் கணியூர் கிருட்டிணன் தலைமை தாங்கினார். கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் முனீ சுவரன் முன்னிலை வகித்தார்.
இயற்றப்பட்ட தீர்மானங்கள்
1. திராவிடர் கழக உறுப் பினர்கள் அனைவரின் ஒத்து ழைப்புடன் விடுதலை சந் தாவை விரைவாக திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் கொடுக்கப்பட்ட இலக்கை விரைந்து முடிப்ப தென தீர்மானிக்கப்பட்டது.
2. ஏப்ரல்-30, மே-1 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற மாநில இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் 25.2.2022 அன்று மது ரையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்ட தீர்மானங் களை ஏற்றுச் செயல்படுத்து வதென முடிவு செய்யப்பட்டது.
3. ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞ ரணி மாநாட்டிற்கு தாராபுரம் கழக மாவட்டத்தின் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்து இளைஞரணிச் சீருடை அணிந்து கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செய லாளர் முத்துகிருட்டிணன், தங்கவேல், சக்திவேல், மாரியப் பன், அழகப்பன், மாரிமுத்து, சின்னப்பதாசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment