இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்

கொழும்பு, ஜூலை 14- நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்ட தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பி யோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட் டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத் திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்தனர். அதற்கு முன்பாகவே அதிபர் மாளி கையை விட்டு வெளியேறிய கோத் தபய, கொழும்பு பன்னாட்டு விமான நிலையம் அருகே உள்ள ராணுவ தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாக தெரிகிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை யடுத்து, அதிபர் பதவியிலிருந்து 13ஆ-ம் தேதி விலகுவதாக கோத்த பய அறிவித்தார். இதையடுத்து, கூட்டணி அரசை அமைப்பதற் கான நடவடிக்கைகளை எதிர்க் கட்சிகள் துரிதப்படுத் தின. நாட் டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் 20-ஆம் தேதி நடக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அறிவித்தபடி கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று (13.7.2022) அளிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கடிதம் எதையும் வழங்காமல் ரகசி யமாக மாலத்தீவுக்கு தப்பியோடி விட்டார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு தப்பிச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதிகாலை மாலே நகரை அடைந்து விட்டதா கவும், அங்கு பாதுகாப்பான இடத் தில் தங்கியிருப்பதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன.

மாலத்தீவில் தஞ்சம்

மாலத்தீவு நாட்டு ராணுவ அதிகாரிகள் அவரை, அங்குள்ள ரகசியத் தீவு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அந்த தீவில் உள்ள மாளிகையில் கோத்தபயவும், அவரது மனைவியும் தங்கியுள்ள தாக தெரியவந்துள்ளது. இலங்கை யில் இருந்து தப்பிச் செல்ல அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்ய மறுத்த நிலையில், அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படு கிறது. அதேநேரத்தில், கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா என்ற விவரத்தை வெளியிட அந்நாடு மறுத்துவிட்டது.

இதனிடையே,இலங்கையில் பதற்றம் நீடித்து வருகிறது. நாட் டின் சில மாகாணங்களில் போராட்டம், வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் கண்ணீர் புகைக்குண்டு களை வீசினர். இதனால், இலங்கை யில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அவசர நிலை பிரகடனம்

இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக பிரதமர் அலுவல கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அதி பர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் ஏற்பட்டுள்ள நிலை மையை சமாளிக்கவும், போராட் டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வரவும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளார். இதை தன்னிடம் கோத்தபய தெரிவித்ததாக அவைத் தலைவர் யாபா அபேவர்த்தனா கூறினார். மேலும், கோத்தபயவிடம் இருந்து விரைவில் பதவி விலகல் கடிதத்தை பெற்றுவிடுவேன் என் றும் யாபா அபேவர்த்தனா தெரிவித்தார். வரும் 20-ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டவுடன் இடைக்கால அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்று ரணில் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, நேற்று (13.7.2022) மாலை கொழும்புவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் இடைக்கால அதிபராக நியமிக்கப் பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்ற அவைத் தலைவர் இடைக்கால அதிபராக செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப் பட்டது.

முன்னதாக இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவா ஹிணி அலுவலகத்துக்குள் போராட் டக்காரர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஒளிபரப்பு தடைபட்டது. காவல்துறையினர்  வந்து போராட் டக்காரர்களை அப்புறப்படுத்திய பின்னர் நிகழ்ச்சிகள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. அதி பர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய  தூதரகம் மறுப்பு

இதுதொடர்பாக இந்திய தூத ரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அதிபர் கோத்தபய ராஜ பக்ச இலங்கையை விட்டு வெளி யேறுவதற்கு இந்தியா உதவியது என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதை இந் தியா திட்டவட்டமாக மறுக்கிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத் துக்கு, அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்’ என கூறப்பட்டு உள்ளது. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டி ருப்பதால் அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரி வித்தார்.

இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபயவை வெளியேற்றக்கோரிஅந்நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு போராட் டம் நடத்தப்பட்டது. கோத்தபயா வுக்கு அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட் டம் நடந்தது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராஹிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்களும், இலங் கையில் இருந்து புலம்பெயர்ந்தவர் களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment