சேலம், ஜூலை 30- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கருநாட காவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் முழுக் கொள்ளவை எட்டின.
இதையடுத்து, இந்த அணை களில் இருந்து காவிரியில் திறக்கப் படும் உபரிநீரின் அளவு அதிகரிக் கப்பட்டுள்ளது. இதனால், மேட் டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ள நிலையில், அணை யின் பாதுகாப்பைக் கருதி, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து திறக் கப்படும் உபரிநீரின் அளவும் அதி கரிக்கப்பட்டுள்ளது.
கருநாடகா அணைகளிலிருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 1,16,029 கன அடியிலிருந்து 1,15,836 கன அடியாக குறைந்துள்ளது.இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1.05 லட்சம் கன அடி யும், நீர் மினிநிலையம் வழியாக டெல்டா பாசனத்திற்காக வினா டிக்கு 23,000 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது
No comments:
Post a Comment