குருவரெட்டியூரில் சுயமரியாதைச் சுடரொளி பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் இணைந்து திராவிடர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். பிரகலாதன் உருவப் படம் பொறித்த நினைவுக் கல்வெட்டினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். தந்தை பெரியார் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏராளமான ஊர் மக்கள் திரண்டு வந்திருந்தது, திராவிடர் கழகக் கொள்கை வீரரின் செயல்பாடுகளை, மக்களுக்காக, பிரகலாதன் ஆற்றிய பணியை பறைசாற்றியது குறிப்பிடத்தக்கது (குருவரெட்டியூர், 4.7.2022)
Tuesday, July 5, 2022
Home
கழகம்
குருவரெட்டியூரில் சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பம்- கல்வெட்டு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்
குருவரெட்டியூரில் சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் நினைவுக் கொடிக்கம்பம்- கல்வெட்டு மற்றும் மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment