'நீட்' தேர்வு : மனிதாபிமானமற்ற கொடுமை உள்ளாடைகளைக் கழற்றக் கூறிய நீட் தேர்வு மய்ய நிர்வாகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 19, 2022

'நீட்' தேர்வு : மனிதாபிமானமற்ற கொடுமை உள்ளாடைகளைக் கழற்றக் கூறிய நீட் தேர்வு மய்ய நிர்வாகம்

திருவனந்தபுரம், ஜூலை 19 கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மய்யத்தில் தேர்வு எழுதச் சென்ற மாண விகளின் உள்ளாடைகளை கழற்றச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொல்லம் அருகே அயூரில் உள்ள மர் தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்போர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் ‘மெட்டல் ஹூக்’ வைத்த ப்ரா-வை கழற்றவேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வு மய்யத்திற்குள் மெட்டல் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அதி காரிகள் உறுதிப்படக்கூறியதை அடுத்து மாண விகள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தங்கள் உள்ளாடையை அகற்றி விட்டு தேர்வு அறைக்குள் செல்ல அனு மதிக்கப்பட்டனர். இதுகுறித்து மர் தோமா நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்ட நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், தேர்வு நடத்தும் அதிகாரிகள் அனைவரும் நீட் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.

இருந்தபோதும் மாணவிகள் பலர் உள் ளாடை இன்றி தேர்வு அறைக்குள் அமர கூச்சப்பட்டு அழுததை அடுத்து அதிகாரி களிடம் பேசி, துப்பட்டா அணிய அனுமதி பெற்றுத் தந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு மய்ய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்லம் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் புகார் அளித்துள்ளார்.மேலும், கரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விட்டு  மாணவிகளின் உள்ளாடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வைத்து செல்லவேண்டிய அவலமும் அரங்கேறியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கேரள மாநில உயர்கல்வி அமைச்சர் பிந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு இடங்களில் விதவித மான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதால், அதிகாரிகளின் இந்த வினோதமான அத்துமீறல் நடைமுறைக்கு உரிய வழிகாட்டுதல் நடவடிக் கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பலநூறு ஆண்டுகளாக அடிமைப்பட் டிருந்த பெண்கள் கடந்த ஒரு நூற்றாண்டாக அனுபவித்து வரும் சுதந்திரத்தை - தற்போது இந்த நீட் தேர்வு சம்பவங்கள்மூலம் மீண்டும் பறித்து அடிமைப்படுத்துவதாக கேரளாவில் உள்ள பெண்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment