இந்த இரண்டு மாதமும் பார்ப்பனர்கள் பிழைக்க என்ன செய்வார்கள்? அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதாவது காவடியாத்திரை செல்பவர்கள் கழுதைக்கு திருமணம் செய்துவைத்து புறப்பட்டால் பயணம் வெற்றிகரமாக முடியும் என்று வருவாய் இழந்த பார்ப்பனர்கள் புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
அதிலிருந்து யாத்திரை செல்லும் எல்லா குழுக்களும் எங்கிருந்தோ ஆண் - பெண் கழுதையை இழுத்துவந்து பார்ப்பனரை அழைத்து அனைத்து வகையான சடங்குகளையும் செய்து பார்ப்பனருக்கு தட்சணை வைப்பார்கள்.
பார்ப்பனர்கள் தட்சணையையும் பெற்று கொண்டு திருமணம் செய்து வைத்ததற்கு கூலியாக பணமும் பெற்றுக்கொள்வார்கள். ஜூலை - ஆகஸ்ட் இரண்டு மாதங்களும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தே பெரும் பணம் பார்த்துவிடுவார்கள்.
No comments:
Post a Comment