அரியலூரில் இளைஞரணி மாநில மாநாட்டுப் பரப்புரைப் பணிகளில் பொறுப்பாளர்கள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

அரியலூரில் இளைஞரணி மாநில மாநாட்டுப் பரப்புரைப் பணிகளில் பொறுப்பாளர்கள் தீவிரம்

ஜெயங்கொண்டம், ஜூலை 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்காக துண் டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கடைவீதிகளில் நன்கொடை திரட்டும் பணிகள் 11.7.2022 திங்கள் மாலை அய்ந்து மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மண்டல தலைவர் இரா. கோவிந்தராஜன்,  மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்தி ரன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் சி.சிவக் கொழுந்து, செந்துறை ஒன்றியதலைவர் மு.முத் தமிழ்செல்வன், ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் துரை. பிரபா கரன், தா.பழூர் ஒன்றிய தலைவர் இரா.இராமச் சந்திரன், ஒன்றிய அமைப் பாளர் சி. தமிழ் சேகரன், மண்டல இ.அ.செயலா ளர் பொன். செந்தில் குமார், மாவட்ட இணை அ.துணைச் செயலாளர் திராவிட விஷ்ணு, உள் ளிட்ட பொறுப்பாளர் கள் பங்கேற்று மாநாட்டு துண்டறிக்கைகளை கடைவீதியில் கொடுத்து பெரியாரின் உழைப்பை எடுத்துச் சொல்லி வீதிவீதியாக பிரச்சாரம் மேற் கொண்டனர். 

கடைவீதியில் கருப்புச் சட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் செங்குந்த புரம் பாலகிருட்டிணன் தாமாகவே அழைத்து மாநாட்டிற்கு நன்கொடை அளித்தார்.கடைக்காரர் களும் இயன்றவரை நன் கொடை அளித்து உத வினார்கள்.

No comments:

Post a Comment