டில்லி பள்ளிகளில் உள்ளதைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் நவீன மேசைகள் மாநகராட்சி நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

டில்லி பள்ளிகளில் உள்ளதைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கும் நவீன மேசைகள் மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஜூலை 14  டில்லி பள்ளிகளில் உள்ளதை போன்று முதலமைச்சர்உத்தரவுபடி, சென் னை மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேசைகள் கொள்முதல் செய்ய சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.8கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. 

இதுகுறித்து, சென்னை மாநக ராட்சி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில், அரசு முறை பயணமாக முதலமைச்சர் டில்லி சென்றபோது, டில்லி மாநில அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உட் கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார். பின்னர், டில்லி பள்ளி களில் உள்ளதை போன்று சென் னைப் பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் பயில்வதற்கு நவீன மேசைகளை அமைக்க உத்தர விட்டார். 

இதனைத் தொடர்ந்து, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.8 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள 108 மாநகராட்சி பள்ளிகளுக்கு 10,279 மேசைகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை, 1,291 நவீன மேசைகள் கொள்முதல் செய்யப்பட்டு மாநக ராட்சி பள்ளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. இதில் 1 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ள வகுப்பு களுக்கு ஏற்றார் போல் மேசைகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை மஞ்சள் நிறத்திலும், 4 முதல் 5 வகுப்பு வரை ஆரஞ்சு நிறத்திலும், 6 முதல் 8ஆம் வகுப்பு இளஞ்சிவப்பு நிறத் திலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நீல நிறத்திலும் மேசைகள் அமைக் கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment