டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது அய்ந்து முறை இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் செய்தியாளர், இங்கிருந்து பாகிஸ்தான் உளவு அமைப்பான அய்எஸ் அய்-க்கு சில முக்கிய ரகசியங்களைச் சேகரித்துச் சென்றது தொடர்பாக மேனாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியும் காங்கிரஸ் கட்சியும் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி யுள்ளது. இதற்கு ஹமீது அன்சாரி கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
* ராமன் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 26ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஆரியம் - திராவிடம், நம்மை பிரிக்க பிரிட்டிசார் உருவாக்கியது, மீண்டும் ஆளுநர் பேச்சு.
* குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பாஜக தலைமை மேற்கு வங்க திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவது கீழ்த்தரமான வேலை, மம்தா கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* குடியரசுத் தலைவரானால், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன், யஷ்வந்த் சின்ஹா பேச்சு..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment