மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 11, 2022

மேட்டுப்பாளையம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

10.7.2022 மாலை 5 மணிக்கு வசந்தம் ஸ்டீல்-இல் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு தோழர் முத்துசாமி தலைமை தாங்கினார். விடுதலை 60,000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் இணைந்து மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பாக சந்தா சேர்ப்பது, மற்றும் ஜூலை 30-இல் அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பெருமளவில் கலந்து கொள்வது, மேட்டுப்பாளையம் அருகில் உள்ள குட்டை புதூரில்   தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார் கபடி குழு சார்பாக நடைபெறும் கபடி போட்டிக்கு ஆதரவளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட தி. க. தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ.சந்திரன், குட்டை புதூர் நாராயணன், மாவட்ட அமைப்பாளர் செல்வராசு, குட்டை புதூர் பிரவீன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வீரமணி, முருகேசன், ரங்கசாமி, லியாக்கத் அலி, உட்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தோழர்களிடத்தில் விடுதலை சந்தா புத்தகம் வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment