மகாராட்டிரா மாநில பாடப் புத்தகத்தில் தமிழ்நாடு மாணவி பற்றிய பாடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

மகாராட்டிரா மாநில பாடப் புத்தகத்தில் தமிழ்நாடு மாணவி பற்றிய பாடம்

மும்பை, ஜூலை 5-  புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளு வர் நகரைச் சேர்ந் தவர் கே.ஜெயலட்சுமி. இவர் தற்போது கல் லூரி ஒன்றில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார்.

இவர் புதுக்கோட்டை ராணி யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தபோது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அதற்கான பயணச் செலவை மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து தகவல் வெளியா னதைத் தொடர்ந்து பலரும் இம்மாணவிக்கு உதவி செய்த னர். மேலும், அதற்கான முழுத் தொகையையும் 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது.

அப்போது, தனக்கு தேவை யான பணம் கிடைத்துவிட்டது என்று தொண்டு நிறுவனத்தின ரிடம் கூறிய மாணவியிடம், வேறு ஏதாவது உதவி தேவை யெனில் கேளுங்கள் என்றதும், “எங்கள் ஊர் மக்கள் பலர் கழிப் பறை இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வீட்டுக்கொரு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுங் கள்” என்று கேட்டுள்ளார். இதை ஏற்ற அந்த நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறையை கட் டிக் கொடுத்தது. வீடு தேடி உதவி செய்ய வந்தவர்களிடம், எனக்கு உதவி வேண்டாம். ஊர் மக்க ளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுங் கள் என்று கூறிய அந்த மாண வியை பலரும் பாராட்டினர். ஜெயலட்சுமியின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து மகா ராட்டிராவில் உள்ள 7-ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'கனவு மெய்ப்படும்' எனும் தலைப்பில் 4 பக்கத்தில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.

இதை, ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். 

இதுகுறித்து மாணவி ஜெயலட்சுமி கூறும் போது, ‘‘மகாராட்டிரா மாநிலத் தின் மாநில பாடநூலாக்கம் மற்றும் பாடத்திட்ட ஆய்வுக் கழகத்தின் 7ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் என்னைப் பற்றிய பாடம் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment