தருமபுரி, ஜூலை 13- தரும புரியில் இருந்து ஜுலை 30 அரியலூரில் நடை பெறும் மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டிற்கு 3 பேருந்து களில் 150-க்கும் மேற்பட்ட சீருடையுடன் இளைஞ ரணி தோழர்கள் பங் கேற்க ஏற்பாடு 11.07.-2022 அன்று மாலை 6.30 மணி யளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் பொறுப்பா ளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாநாட்டு பணிகளை எவ் வாறு செய்ய வேண்டும், பேரணிக்கான இளைஞர் களை எவ்வாறு தயார் செய்வது,மாவட்டத்திலிருந்து அதிக அளவி லான இளைஞர்களை பங்குபெற செய்வது போன்ற மாநாட்டுக்கான பல்வேறு பணியின் திட் டங்களை வகுத்தளித்தார். மாநில அமைப்பு செயலா ளர் ஊமை.ஜெயராமன், வீ.சிவாஜி, மாவட்ட செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன், மண்டல ஆசிரியரணி அமைப்பா ளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நன்கொடை வழங்கி மாநாடு நன்கொடை திரட்டும் பணி சிறப்பாக நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment