லண்டன், ஜூலை 8 இங்கிலாந்தில் தற்போது கொந்தளிப்பான அரசி யல் சூழல் நிலவி வருகிறது. அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் 2019-ஆம் ஆண்டு பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார். அப் போதிலிருந்தே அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அண்மையில் அவர் அமைச்சரவையிலிருந்து ரிஷி சுனக், சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான் சனைக் கண்டித்து பதவி விலகினர்.
இதனைத் தொடர்ந்து குறுகிய நாட்களிலேயே சுமார் 50 அமைச் சர்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக் கின்றனர்.
இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார். மேலும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பிரதமராக பதவியில் நீடிப்பார் என்றும் கூறியிருக்கிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக வாய்ப்பிருப்பதாக அரசி யல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment