நிர்பயா வழக்கு குற்றவாளிகள் உள்பட 6 பேரின் கருணை மனுக்கள் குடியரசுத்தலைவர் நிராகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் உள்பட 6 பேரின் கருணை மனுக்கள் குடியரசுத்தலைவர் நிராகரிப்பு

புதுடில்லி, ஜூலை 10  இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 72 ஆனது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு, மன்னிப்பு வழங்கவோ, அந்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ அல்லது தண்ட னையை குறைக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கு கிறது. இதன்படி, தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த அய்ந்தாண்டுக் காலத்தில் தனக்கு வந்த தூக்குத் தண்டனைக் குற்றவாளிகள் 6 பேரின் கருணை மனுக்களை  நிராகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந் தைகள் இருந்த வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக் கொன்றார். கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜகத்ரா ய்க்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்ட னையை உறுதி செய்தது. இதை யடுத்து அவர் குடியரசுத் தலை வருக்கு கருணை மனு அனுப்பினார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக வந்தவுடன் இந்த கருணை மனு வைத்தான் முதன் முதலாக நிரா கரித்தார்.

இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ஆம் ஆண்டு நிராகரித்தார். 2012-ஆம் ஆண்டு டில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட னர். இவர்களில் முக்கிய குற்றவாளி யான ராம்சிங் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண் டார்.

 ஒருவர் சிறார் என்பதால் சிறார்  சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். மற்ற 4 பேருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப் பட்டது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக குடியரசுத்தலைவருக்கு கருணை மனுக் களை அனுப்பினர். இந்த மனுக்களை 2020-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். கடைசியாக 2006-ஆம்  ஆண்டு தூக்குத் தண்டனை பெற்ற  சஞ்சய் என்பவரது கருணை மனுவும்  ராம்நாத் கோவிந்த்-தால் நிராகரிக்கப் பட்டது. 

இந்த வகையில், தனது அய்ந்தாண்டு பதவிக்காலத்தில், தூக்குத் தண்டனை பெற்ற 6 பேரின் கருணை மனுக்களை ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். 1987 முதல் 1992 வரை குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட் ராமன் 45 கருணை மனுக்களை நிரா கரித்தார். அவருக்கு அடுத்தபடியாக 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவர் பதவி வகித்த பிரணாப் முகர்ஜி 30 கருணை மனுக்களை நிரா கரித்தார்.  

அதற்கு முன்பு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 2 கருணை  மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment