வடோதரா,ஜூலை 26 முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜ ராத்தில் கள்ளச் சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்து பலர் கவலைக் கிடமாக உள்ளனர்.
இந்தியாவில் முழு மதுவிலக்கு உள்ள மாநிலம் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் ஆகும். அதே வேளையில் இங்குக் கள்ளச் சாரா யம் மற்றும் மதுக் கடத்தல் குற் றங்களும் பெருமளவில் நடைபெறு கின்றன என்பதும் உண்மையாகும். அவ்வகையில் அகமதாபாத் அருகில் உள்ள கிராமங்களில் தற் போது கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்மாநிலத்தின் ததுகா வட் டத்தில் உள்ள சிற்றூர்களில் இருந்து கூலித் தொழிலாளர்கள் பக்கத்து ஊருக்குச் சாராயம் குடிக்கச் சென்றுள்ளனர் அவ் வாறு சாராயம் குடித்ததும் ஓரிரு மணி நேரத்தில் பலருக்கும் உடல் நலம் பாதிப்பு உண்டாகி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
இதில் இது வரை 28 பேர் உயிர் இழந்துள்ளனர். தற் போது பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இவர்கள் அருந்திய சாராயத் தில் ஏதேனும் தடை செய்யப்பட்ட இரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசா ரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக மெதில் ஆல்கஹால் என்னும் கெமிகல் கலக் கப்படும் போது அதை அருந் தினால் கண் பார்வை பறி போகலாம் எனவும், மூளைச்சாவு நிகழலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment