தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 2,672 பேருக்கு கரோனா

சென்னை, ஜூலை. 4 தமிழ்நாட்டில் இன்று ஆண்கள் 1,483, பெண்கள் 1,189 என மொத்தம் 2,672 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். அதிக பட்சமாக சென்னையில் 1072 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 82,775 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 30,245 பேர் குணமடைந் துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,487 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.  நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,504 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (3.7.2022)  கரோனா தொற்று பாதிப்பு 2,533 ஆகவும், சென்னையில் 1059 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங் களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் மூன்றாவது நாளாக 1000-அய் கடந்துள்ளது.

இந்தியாவில்

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 16,103 பேர் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 13,929 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.95 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment