மோடி அரசு அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியால் குஜராத்தில் மட்டும் 25 சதவிகித நிறுவனங்கள் மூடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

மோடி அரசு அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியால் குஜராத்தில் மட்டும் 25 சதவிகித நிறுவனங்கள் மூடல்!

அகமதாபாத், ஜூலை 4- நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற  பெயரில், கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூலை  மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை  (Goods and Services Tax -GST) மோடி  அரசு அறிமுகப் படுத்தியது. இதன்மூலம் வணிகம் செய்வது எளிதாகும் என்று அது கூறியது. 

அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி  விதிப்பு அமல்படுத்தப்பட்டதன் 5-ஆவது  ஆண்டு நிறைவையும் மோடி அரசு தற்போது கொண் டாடி வருகிறது. 

டில்லியில் நடந்த கொண் டாட்டத்தில், “குழப்பத்தை ஏற் படுத்தி வந்த பல அடுக்கு வரி விதிப்பு  நடைமுறை ஜிஎஸ்டி- யால் ஒழிந்தது; வரி செலுத்துவோரி டையே புதிய நம்பிக்கை ஏற் பட்டது” என்று  ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசினார்.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியோ, “சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5-ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கி யமானது” என்று சற்று அதிக மாகவே கூறினார். இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் வணிக நிறுவனங்கள், ஜிஎஸ்டி பதிவுகளை அர சாங்கத் திடமே கையளித்து விட்டு கடை களை மூடிவிட்டுச் சென்றுவிட்ட தாக புள்ளி விபரங்கள் வெளி யாகியுள்ளன. இந்த 2 லட்சத்து 75 ஆயிரம் நிறு வனங்கள் என்ற எண்ணிக்கையானது, குஜராத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் 11.1  லட்சம் நிறுவனங்கள் என்ற எண் ணிக்கை யில் சுமார் நான்கில் ஒரு பங்கு என்பது முக்கியமானதாகும். 

அதிலும், கரோனா கட்டுப் பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் கடந்த இரண்டு  ஆண்டுகளில் மட்டும் 1.24 லட்சம் நிறு வனங்கள் ஜிஎஸ்டி-யில் இருந்து வெளி யேறி இருப்பது தெரியவந்துள்ளது. 2018-_2019 நிதியாண்டில் 30 ஆயிரத்து 732 வணிக நிறுவனங்கள் தொழில் முடக் கம் காரணமாக ஜிஎஸ்டி-யில் இருந்து  வெளியேறுவதாக அறிவித்த  நிலையில்,  2020-_2021 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 213 நிறுவனங்களாக அதிக ரித்துள்ளது.  மறுபுறத்தில், 2018_-2019 நிதியாண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் புதிய நிறுவனங்கள் ஜிஎஸ்டி-யில் பதிவு செய்த நிலை யில் 2020_-2021 நிதியாண்டில் அது 1 லட்சத்து 39 ஆயிரமாக குறைந் துள்ளது. இதுதொடர்பாக, ‘டைம்ஸ் ஆப் இந்தி யா’வுக்கு பேட்டியளித்த குஜராத் வர்த்த கம் மற்றும் தொழிற்துறை துணைத் தலை வர் பதிக் பட்வாரி “ஜிஎஸ்டி வரிக் கொள்கை ஒவ்வொரு மாத மும் வரி செலுத்த வேண்டும் என் பது போன்ற பல் வேறு நடைமுறை சிக்கல்களை கொண்டிருக்கிறது. சிறுமுதலீட்டில் தொழில் துவங் கியவர்கள் தங்களுக்கு வரவேண் டிய வரி நிலுவைகளை எதிர் பார்த்து காத்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்  கொள்ள வேண்டி யுள்ளது. இதனால் பெருநிறுவனங் களுடன் தங்களை இணைத்துக் கொள்வது; தங்கள் துணை  நிறுவ னங்களை ஒன்றாக்கி விடுவது போன்ற முடிவுகளை தொழில் முனை வோர்கள் மேற்கொண் டனர். தனித்தனி ஜிஎஸ்டி செலுத் தும் நடைமுறையால் ஏற்பட்ட பெரும் செலவினங்களை இதன்  மூலம் அவர்கள் தவிர்த்துக் கொண் டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment