சென்னை, ஜூலை 26 பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகையை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை வருமாறு: பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து 2020 ஏப்ரல் 28ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக நடப்பு நிதியாண்டு முதல் உயர்த்தப்படும் என்று செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி முதல் வழங்கப் பட்டு வரும் மருத்துவ உதவித் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. இந்த ஆணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.
No comments:
Post a Comment