இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கரோனா: 38 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,139 பேருக்கு கரோனா: 38 பேர் உயிரிழப்பு

புதுடில்லி, ஜூலை 14 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 20,139 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 38 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 5.10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்,  20,139 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,89,989ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி  மேலும் 38 பேர் இறந்துள்ளனர்.  உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.


No comments:

Post a Comment