முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, ஜூலை 8 சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதைக் கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி 6.7.2022 அன்று முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜூலை 7) 233 நபர்களிடம் இருந்து ரூ.1.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment