தஞ்சை, ஜூலை 4 தஞ்சை மாநகரில் கரோனாவை கட்டுப்படுத்த 100 இடங்களில் வருகிற 10ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
10ஆம் தேதி நடைபெறும் முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர். முகாம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகாமில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை தடுப்பூசிகளும், .60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment