ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 5, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நமது இந்த மகத்தான நாட்டில் எந்த வகையான பொது மொழியையும் திணிக்க வேண்டிய அவசியமில்லை. பல்வேறு மொழியியல் பின்னணியில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும் போது, அவர்கள் தாங்களாகவே வழிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்கிறார், எழுத்தாளர் கிருஷ்ண சாஸ்திரி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் பதவி வகிப்பதை நீக்கி மேற்கு வங்கம், கேரளம், மகாராட்டிரா, ஆந்திர பிரதேசம் சட்டம் கொண்டு வந்ததை தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசும் சட்டம் கொண்டு வர உள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இபிஎஃப் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைப்பது தொடர்பாக நரேந்திர மோடியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  சாடியுள்ளது. மக்களின் துயரங்களைச் சேர்ப்பதில் பிரதமர் மும்முரமாக இருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன..

. - குடந்தை கருணா


No comments:

Post a Comment