பருவமழை: முன்னெச்சரிக்கை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

பருவமழை: முன்னெச்சரிக்கை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை, ஜூன் 27 சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 அய்ஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.

இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு அய்ஏஎஸ் அதிகாரி என 15 அய்ஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.


No comments:

Post a Comment