சென்னை, ஜூன் 27 கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் - திருநெல்வேலி(06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை(06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1ஆம்தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
திருச்சி - ஈரோடு(06809/06810), திருச்சி - ஈரோடு(06611/06612) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 9ஆம்தேதியில் இருந்தும், அரக்கோணம் - கடப்பா (06401/06402), கோவை - சேலம் (06802/06803), திருச்சி - கரூர்(06881/06882), சேலம் - கரூர் (06821/06822) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 27ஆம்தேதியில் இருந்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் - திருச்சி (06683), திருச்சி - காரைக்கால் (06880), காரைக்கால் - தஞ்சாவூர்(06457) முன்பதிவில்லா ரயில்கள் ஜூலை 23ஆம்தேதி, விழுப்புரம் - மயிலாடுதுறை (06991/06990) முன்பதிவில்லா ரயில் ஜூலை 11ஆம்தேதி,
தஞ்சாவூர் - காரைக்கால் (06832) ரயில் ஜூலை 24ஆம்தேதி உட்பட தெற்கு ரயில்வேயில் 34 முன்பதிவில்லா ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment