குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை தொடங்கியது

குற்றாலம், ஜூன் 8 குற்றாலத் தில் பெரியாரியல் பயிற்சி முகாம் தொடங்கப்பட் டது. துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை. சந்திர சேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், வீ. அன்பு ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

குற்றாலத்தில் 43- ஆம் ஆண்டாக வி. கே. என். மாளிகையில் 8-.6.-2022  முதல் 11.-6.-2022 வரை பெரியாரில் பயிற்சிப் பட் டறை நடைபெறவுள்ளது. இப்பெரியாரியல் பயிற் சிப் பட்டறையை தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமை யில் கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.

வருகை தந்த அனை வரையும் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வரவேற்று உரையாற்றினார்.

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், பகுத்தறி வாளர் கழகத்தின் துணைத் தலைவர் கே .டி.சி. குரு சாமி, தலைவர் இரா.காசி, மண்டலச் செயலாளர் அய்.இராமச்சந்திரன், தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், மாவட் டச் செயலாளர் முருகன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பால். ராசேந் திரம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பயிற்சி பட்டறையில் 95 மாண வர்கள் பங்கேற்றுள்ள னர்.

நிகழ்வில் திராவிடர் கழக சட்டத்துறை செய லாளர்  மு. சித்தார்த்தன், மாநில மகளிரணி அமைப் பாளர் சி.கிருஷ்ணேஸ் வரி, கன்னியாகுமரி மாவட் டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பட்டுக் கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், தாம்பரம் மாவட்டச் செய லாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட் டத் தலைவர் ஆர்.டி.வீர பத்திரன் உள்ளிட்ட கழ கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மண்டல மாணவர் கழகச் செயலாளர் இனி யன், மேலமெய்ஞானபுரம் அமுதன், ஆத்தூர் அ. சுரேஷ், ஆலங்களம் குமார், சவுந் திரபாண்டியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment