கடும் எதிர்ப்பு: கருநாடக பாஜக அரசு பாடநூல் திருத்த குழு கலைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

கடும் எதிர்ப்பு: கருநாடக பாஜக அரசு பாடநூல் திருத்த குழு கலைப்பு

பெங்களூரு, ஜூன் 8- கரு நாடக மாநிலத்தில் பள்ளி பாடத் திட்டங்களில் அம்பேத் கர், பசவண்ணர். பகத்சிங், நாராயணகுரு, தந்தை பெரியார் போன்ற தலை வர்களின் பாடங்கள் குறைக்கப்பட்டன. சில ரின் பாடங்கள் நீக்கப் பட்டன. இதற்கு எதிர்க் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த னர். 

கன்னட எழுத்தாளர்க ளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்கள் அனைவரும் சேர்ந்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதி தங்களின் அதிருப் தியை வெளிப்படுத்தினர். மேலும் தேசியகவி குவெம் புவை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை பாடநூல் குழு தலைவர் ரோகித் சக்ரதீர்த்த சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதற்கு ஆதி சுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தினார். இதையடுத்து ரோகித் சக்ரதீர்த்த தலை மையிலான பாடநூல் குழு கலைக்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சக்ரதீர்த்த தலைமையிலான பி.யூ.சி. பாடநூல் திருத்த குழுவையும் மாநில அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் எழுத்தாளர்களின் கடும் எதிர்ப்புக்கு அரசு பணிந் துள்ளது.


No comments:

Post a Comment