சென்னை, ஜூன் 7 திறன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன் படுத்தி பள்ளி மாணவர்கள் பேருந் தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத் தில் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: பள்ளி மாணவர்களுக்கு திறன் அட்டை வழங்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரை வில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந் தில் பயணிக்க திறன் அட்டை வழங்கப்படும்.
அதுவரை பழைய பயண அட் டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள் ளலாம். மேலும், பள்ளி வாகனங் களில் முன்புறம் பின்புறம், கேம ராக்கள் பொருத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக கண்காணிக்கப்படு வதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற் கொள்ளப்படும். பேருந்து பணி மனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக் குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய் விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனர். வரும் நாட்களில் முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment