தஞ்சாவூர், ஜூன் 16 எதிர்வரும் 2022 ஜூலை 30 அன்று அரியலூரில் கழக இளைஞரணி மாநில மாநாடு எழுச்சியுடன் நடை பெறவுள்ளது.
மாநாட்டு முன் அறிவிப்பு துண்டறிக்கை, மற்றும், இளைஞரணி சீருடை அணிவகுப்பு, பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி தொடர்பான வேண்டுகோள் கடிதங்கள் மாநில, மண்டல,மாவட்ட திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்களுக்கு (550 கடிதங்கள்) அனுப்பும் பணி 15-06-2022 புதன்காலை 9 மணிமுதல் இரவு 9.30 மணிவரை தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த. சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் தஞ்சை இரா.வெற்றிக்குமார், திண்டுக்கல் நா.கமல்குமார், தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர் ஆ.உத்தராபதி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், விருத்தாசலம் பிரகாஷ், அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவர்கள் சதீஸ், கார்த்தி உள்ளிட்ட தோழர்கள் பணிகளை தொய்வின்றி, சோர்வின்றி செய்தனர்.
No comments:
Post a Comment