செஞ்சியில் கழக பொன்விழா மாநாடு குடும்பத்தோடு பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

செஞ்சியில் கழக பொன்விழா மாநாடு குடும்பத்தோடு பங்கேற்க முடிவு

குமரிமாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ. சிவதாணு தலைமை யில் குமரிமாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலையில் செஞ்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர்கழக பொன்விழா மாநில மாநாட்டில் பங்கேற்க மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்சாண்டர், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செய லாளர் பெரியார்தாஸ், கன்னியாகுமரி யுவான்ஸ் மற்றும் பலரும் குமரி மாவட்டத்திலிருந்து பேருந்து மூலம் மாநாட்டிற்கு வருகை தருகின்றனர்.  குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் தீர்மானித்தபடி மாநாட்டிற்கு நன்கொடை திரட்டும் பணித் தோழர் களை திரட்டும் பணிகளிலும் கழகத் தோழர்கள் ஈடுபட்டனர்.


No comments:

Post a Comment