புது சீருடை .... புது புத்தக வாசம் .... விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

புது சீருடை .... புது புத்தக வாசம் .... விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, ஜூன் 13   தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப் பட்டு 1-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டன.

 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஜூனில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை  பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை வரவேற்க பள்ளிகள் தயாராயின.  வகுப் பறைகள், இருக்கைகள் சீரமைக்கப்பட் டுள்ளன. அரசுப் பள்ளிகளில் முதல் நாளான இன்றே மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் முதல் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், கரோனா கட்டுப் பாட்டு விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என மருத் துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். இந்நிலையில் பள்ளிகள் காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறும் என்றும், அதற்கான மாதிரி பாடவேளையையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளி அமைவிடம், போக் குவரத்து வசதி உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு, பள்ளிகள் செயல் படும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பேரவையில் அறிவிக் கப்பட்ட மாணவர்களுக்கான வெளிநாடு சுற்றுலா உள்ளிட்டத் திட்டங்களையும் செயல் படுத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. 

No comments:

Post a Comment